August 15, 2008

சர்தார்ஜிக்கள் காமெடியன்களா???

இன்று நமது அலைபேசியில் உள்ள பல வசதிகளில் ஒன்று குறுஞ்செய்தி அனுப்புவது. அதில் நமக்கு பல வகையான செய்திகள் வருகின்றன. அவற்றில் முக்கிய பங்கு வகிப்பது நகைச்சுவை செய்திகள் தான். அதிலும் சில குறுஞ்செய்திகள் நமது சகோதரர்களைக் கிண்டல் செய்யும் வகையில் உள்ளன. நான் சொல்ல வருவது “சர்தார்ஜி ஜோக்ஸ்“ பற்றி. இந்த மாதிரி செய்திகள் அனுப்புவது தன் தலையில் தானே மண்ணை வாறிப் போட்டுக் கொள்வதைப் போல. இவ்வகை கிண்டல் செய்திகள் நமது சகோதரர்களை முட்டாள்களாகவே சித்தரிக்கின்றன.

முதலில் நாம் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்துக் கொள்ள வேண்டும். நமது இந்திய ராணுவத்தில் பெரும்பகுதியான ராணுவ வீரர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். மீதம் உள்ள சிறு பகுதியினரே மற்ற மாநிலத்தை சேர்ந்த்தவர்கள். இப்படி தினமும் இடம், பொருள் பாராமல் நமது நாட்டின் பாதுகாப்பிற்க்கு உழைத்துக் கொண்டிருக்கும் நமது சகோதரர்களைப் பற்றி தினமும் நாம் கேலி, கிண்டல் செய்திகளைப் படித்து, பரிமாறிக்கொண்டிருக்கிறோம். வெட்கம்!!!!

இவ்வகையான சர்தார்ஜிக்கள் சார்ந்த கேலி, கிண்டல் உருவான வரலாறு தெரிந்தால் நாம் மனம் மாற வாய்ப்பு உண்டு என்று எண்ணுகிறேன்.“ நமது நாட்டை வெள்ளையர்கள் ஆண்ட காலத்தில், நமது சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்தவர்கள் பஞ்சாபிகள். இயற்கையிலேயே போராட்ட குணம் மிக்கவர்கள். வெள்ளையர்களால் இவர்களது எதிர்ப்பை சமாளிக்க முடியவில்லை. அதனால் மனோரீதியாக நமது விடுதலைப் போராட்டத்தைக் குலைக்க பஞ்சாபிகள் பற்றி பல கேலிச்சித்திரங்களை உருவாக்கி மக்கள் மத்தியில் பரப்பினர். அவ்வகை கேலிச்சித்திரங்களே, இன்று “சர்தார்ஜி ஜோக்ஸ்“ என்ற பெயரில் நம்மிடையே வலம் வந்துகொண்டிருக்கிறது.

இந்த வரலாறு உண்மையோ! பொய்யோ!! யோசித்துப் பாருங்கள்! நமது சகோதரனைப் பற்றி நாம் தாழ்வாக எண்ண வேண்டும் என்ற கருத்தில் உருவாக்கப்பட்ட ஒன்றை நாம் மகிழ்ச்சி என்ற பெயரில் கொண்டாடி வருகிறோம். உண்மையில் நாம் நமது சகோதரனை மதிக்கிறோமா?? மிதிக்கிறோமா???



பின்வரும் படத்தை பாருங்கள்...

2 comments:

  1. dear friend..
    its a fact you never see a sarthaarji as a begger..
    yes i know when i was in amristar for business tour.not only there.. in other states too...In sakchi bazar(Tata nagar) i stayed in sarthaarji house there i saw the hard work peoples.we are not equal to work like them..

    ReplyDelete
  2. I have visited many parts of Panjab. They are not only hard working but also honest and very kind hearted.

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis