பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...
நம்ம சின்ன வயசுல நாம பல விஷயங்ளை பல வழிகள்ல தெரிஞ்சிக்கிட்டு இருப்போம். அதுல நமக்கு பல நல்ல விஷயங்களை போகிற போக்கில் கதைகள் மூலமாக சொல்லி, நம்மை நல்வழிப் படுத்தியதில் அம்புலிமாமாவிற்கு நிச்சயம் பெரும் பங்குண்டு. அந்தக் கதைகள், விளையாட்டு நமக்குள் பல சிந்தனைகளைத் தூண்டும் வகையில் இருக்கும். பல மாயாஜாலக் கதைகள் உண்மையென்றே நம்பத்தோன்றும். சில கதைகள் படித்து, பயத்தில் தூக்கம் வராத இரவுகளும் உண்டு. இன்னமும் விக்ரமாதித்யன் வேதாளத்தை துரத்திக்கொண்டு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
பெரும்பாலும் நம் வாழ்வில் ஒரு முறையாவது அம்புலிமாமாவை கடந்து வந்திருப்போம். அப்படிப்பட்ட அந்த பழைய பத்தகங்கள் இப்போது நமக்கு வாசிக்கக் கிடைத்தால்... ( நினைக்கும்போதே உடம்பு சிலிர்க்குது....)
பின்னே!! நம் மனதை கவர்ந்த அம்புலிமாமா நிச்சயம் ஒரு காலச்சக்கரம்தான்.... அதில் உள்ள விளம்பரங்கள், எழுத்து நடை இப்படி பல விஷயங்கள் நம்மை சிறு வயதிற்கு இட்டு செல்லும். நம் குழந்தைப் பருவத்தை மீண்டும் நம்மால் வாழ முடியுமா தெரியாது. ஆனால் இதுபோன்ற பழைய தொகுப்புகள் நமக்கு வாசிக்க கிடைத்தால், அந்த குழந்தை பருவத்தை நிச்சயம் உணரலாம்.
அம்புலிமாமாவின் சந்தாமாமா நிறுவனத்தினர் 1947 முதல் 2006 வரையிலான அனைத்து இதழ்களையும் காலவரிசையில் மின் புத்தகமாக கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள். உங்கள் குழந்தைப் பருவத்தை நிச்சயம் கொண்டாடுவீர்கள்.
http://www.chandamama.com/archive/storyArchive.htm
அம்புலிமாமாவின் சந்தாமாமா நிறுவனத்தினர் 1947 முதல் 2006 வரையிலான அனைத்து இதழ்களையும் காலவரிசையில் மின் புத்தகமாக கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள். உங்கள் குழந்தைப் பருவத்தை நிச்சயம் கொண்டாடுவீர்கள்.
http://www.chandamama.com/archive/storyArchive.htm
No comments:
Post a Comment