October 03, 2011

முரண்


இரண்டு முரண்பட்ட மனிதர்களின் சந்திப்பும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுமே இப்படத்தின் கதை. இசைமைப்பாளர் வாய்ப்பு பெற்று பெங்களூருவிலிருந்து சென்னை திரும்பும் சேரன். வழியில் வண்டி சொதப்ப, அங்கு வரும் காரில் lift கேட்டு பயணிக்கிறார். அந்தக் காரில் வருபவர் பிரசன்னா. அப்பாவின் காசில் கூத்தடித்துவிட்டு, எதிர்காலம் பற்றி எந்த அக்கறையும் இல்லாத dirt-minded இளைஞன். இவர்கள் இருவரும் இணைந்த பயணத்தில், நிகழும் மனப்பகிர்வுகளும் அதன் பின்விளைவுகளையும் முடிந்தவரை நேர்கோட்டில், தெளிவான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ். 
 
கிட்டத்தட்ட 3 வருடங்களாக இந்தப் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் இருந்திருக்கிறார் இயக்குனர். காரணம் பிரசன்னா. அந்த அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு பிரசன்னாதான் வேண்டும் என்று அடம் பிடித்ததால் பல தயாரிப்பாளர்கள் தயங்கி ஒதுங்கிவிட பின்பு சேரனே தயாரிக்க முன்வந்தார். இப்போது UTV மூலம் வெளிவந்துள்ளது. இயக்குனரின் எதிர்பார்ப்பை பிரசன்னா நன்றாகவே புரிந்து நடித்துள்ளார். என்னதான் freak-out இளைஞனாக வந்து கெட்ட காரியங்கள் செய்தாலும் அவரது screen presence ரசிக்கவே வைக்கிறது.

அடுத்து சேரன். முகத்தை மூடிக்கொண்டு முதுகு குலுங்கி அழுவதில் expert. அவரது கதையை சொல்லும்போது எங்கேடா இதிலும் முதுகு குலுங்கி அழுதுடுவாரோன்னு நினைச்சேன். நல்ல வேளை!! அப்படி எதுவும் இல்லை. சேரனிடம் சோகமான, அப்பாவித்தனமான ஒரு முகம் உண்டு. அந்த முகம்தான் இந்தப் படத்தினை கடைசி வரை பரபரப்பாகக் கொண்டு செல்கிறது. மெல்ல மெல்ல நைச்சியமாகப் பேசி சேரன் மனதை கலைப்பதில் தொடங்கி பிரசன்னா செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் அவர் காட்டும் முகபாவம் அசத்தல். முக்கியமாக அந்த மாங்காய் திருடும் காட்சி.

படத்தில் 3 நாயகிகள். 3 பேரில் ஹரிப்ரியா முதலிடம் வகிக்கிறார். அக்கறையான தோழியாக வந்து, பின்பு சேரனின் காதலியாவது வரை நல்ல நடிப்பு. மிகச் சரியான தேர்வு. அடுத்து வருபவர் லிண்டா. Anglo-Indian பெண்ணாக வருவதால் அவரது அரைகுறை தமிழை கொஞ்சம் சகித்துக்கொள்ளலாம். மரியா பெண் என்ற கதையை இன்னும் ஆழமாக சொல்லியிருக்கலாம். அந்த கதாபாத்திரத்தின் impact சற்று குறைவாகவே உள்ளது. மூன்றாவதாக நிகிதா. சரோஜாவில் ‘கோடானு கோடி’ எனக் கெட்ட ஆட்டம் போட்டவர், இதில் கெட்டப் பெண்ணாக வருகிறார். சேரனைப் பிடிக்காமல் அவர் சலித்துக்கொள்வது கதையோடு ஒட்டாமல் கொஞ்சம் தனித்தே தெரிகிறது. இது நிச்சயம் திரைக்கதையின் தவறு அல்ல. அவரது நடிப்பு அப்படி. அவரிடம் இன்னும் கொஞ்சம் இயக்குனர் வேலை வாங்கியிருக்கலாம்.

இடைவேளை வரை பிரசன்னா-சேரன் இருவரை மட்டுமே வைத்து வசனங்களாலும், சின்ன சின்ன காட்சியமைப்புகளிலும் படம் தெளிவாக நகர்கிறது. இடைவேளைக்குப் பின்னர் பிரசன்னா செய்யும் காரியங்கள், அதற்கு சேரனின் பதட்டம், ஜெயப்ரகாஷ், ஹரிப்ரியா என இந்த நால்வரைச் சுற்றியே திரைக்கதை நகர்கிறது. அதுவும் மிகப் பரபரப்பாக.... இதற்கு பின்னணி இசை கூடுதல் பலம். இசை: சாஜன் மாதவ்.

கதை ஆரம்பித்த இடத்திலேயே முடிவது, சின்ன சின்ன சுவாரஸ்யமான வசனங்கள், திறமையான எடிட்டிங், பாடலை நுழைக்காமல் கதைப்போக்கில் பாடலின் சில வரிகள் வருவது [climax பாடல் தவிர.....] என தமிழுக்கு நல்ல படம் கிடைத்துள்ளது. ஆனால்.... தேவையில்லாத சில template காட்சிகளால் கதையின் ஓட்டம் ஆங்காங்கே சற்று வேகம் குறைகிறது. தயவு பார்க்காமல் வெட்டியிருக்கலாம். திரைக்கதை இன்னும் வேகம் பிடித்திருக்கும்.
 
 
இருந்தாலும்....
ஒரு நல்ல படம் கொடுத்த ‘முரண்’ குழுவினருக்கு வாழ்த்துகள். 
 
 

1 comment:

நல்லவங்க...

ShareThis