September 27, 2011

உணவகம் செல்கிறீர்களா? ஒரு நிமிடம்....

நமது முகநூல் குழுமம் கேட்டால் கிடைக்கும் ASK மூலம் நுகர்வோர் நலன் பற்றி பல நல்ல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றது. விவாதம் மட்டும் அல்லாமல் பல பிரச்சினைகள் சம்பந்தப்பட்டவரிடம் எடுத்து செல்லப்பட்டு, அதற்கு தீர்வும் காணப்பட்டு வருகிறது.  வாழ்த்துகள்!!
இந்த குழுமத்தில் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளில் அதிகம் அடிபட்டது உணவகங்களின் முறையற்ற சேவை. அதைப் பற்றி பலரது கருத்துகளைப் படித்தபோது எனக்கு சில எண்ணங்கள் தோன்றியது. 
 

அதாவது,  உதாரணத்திற்கு பல கிளைகள் கொண்ட உயர்தர உணவகத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

அங்கு ஒரு சாப்பாட்டின் விலை ரூ.150 என வைத்துக்கொள்வோம்.

அந்த சாப்பாட்டிற்குத் தேவையான மூலப்பொருளின் விலை, தயாரிப்புச் செலவு, பரிமாறுபவரின் சேவை, பிற சேவைக் கட்டணம், வரிகள், நிறுவனரின் லாபம் என அனைத்தையும் உள்ளடக்கித்தான் அந்த 150 ரூபாய் நிர்ணயம் செய்யப்படுகின்றது. [எனது சிந்தனைக்கு எட்டியவரை இங்கு கொடுத்துள்ளேன். விலையின் உள்ளடக்கத்தில் ஏதேனும் கூடக்குறைய இருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.]

இதே சாப்பாடு mall-களில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டால் குறைந்தது 20 ரூபாயாவது அதிகமாக இருக்கும். இங்கு self-service தான். சாப்பாட்டை வாங்கிக்கொண்டு, தண்ணீரும் வாங்கிக்கொண்டு இடம் பிடித்து சாப்பிட வேண்டும். இத்தனைக்கும் இந்த இரண்டு உணவகங்களும் ஒரே நிறுவனத்தின் கீழ் வருபவை.
இப்போது சில அலசல்கள்:

1. சாப்பாடு என்பது எங்கு தயார் செய்தாலும் ஒரே மாதிரிதான் கஞ்சி வடிப்பார்கள், ஒரே மாதிரிதான் குழம்பு கொதிக்கும், எல்லாம் ஒரே கடையில் வாங்கப்பட்ட மாளிகை சாமான்கள்தான்... அப்புறம் ஏன் இந்த விலை வித்தியாசம்?


2. தனி உணவகத்தில் சென்று அமர்ந்தால், ஒரு டம்ளர் தண்ணீர் வைத்துவிட்டுதான் 'சாப்பிட என்ன வேண்டும்?' என்றோ அல்லது menu card கொடுப்பார்கள். ஆனால் mall-களில் தண்ணீர் தருவதைப் பற்றிக் கூட யாரும் கவலை கொள்வதில்லை. ஏன்? [இதற்கு கேட்டால் கிடைக்கும் ASK மூலம் சில தீர்வுகள் கிடைத்துள்ளது.] தனி உணவகத்தில் மினரல் வாட்டர் நமக்குத் தேவைப்பட்டால் மட்டுமே நாம் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் mall-களில் உள்ள உணவகங்கள் வடிக்கையாளர்களை தனியாக தண்ணீர் வாங்க நிர்பந்திக்கின்றன.

3. தனி உணவகத்தில் நாம் நிம்மதியாக அமர்ந்து காற்றாட அல்லது ஏ/சி குளிரில் நிதானமாக சாப்பிட முடியும். ஆனால் mall-களில் உள்ள உணவகங்களில் இடம் பிடிக்க நாம் ஓட வேண்டும். கூடுதலாக காசு கொடுத்து சாப்பாடும் வாங்கிவிட்டு, அதை பத்திரமாக இடம் தேடி அமர்ந்து சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டாலும் நிம்மதி இருக்குமா? நிச்சயம் இருக்காது... இது ஏதோ சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போலதான். 
[இந்த இடங்களில் ஒரு விடுமுறை தினத்தை நினைத்துப் பாருங்கள்!!]

4. mall உணவகங்களில் இன்னொரு கொடுமை, அவர்கள் வைத்து இருக்கும் dining table. இதை வடிவமைத்த engineer யாருங்கோ? அதப் பாத்தீங்கன்னா, அந்த table-ல் ஒருவர் மட்டுமே அமர்ந்து சாப்பிட முடியும். ஆனால் அதை சுற்றி 4 இருக்கையை போட்டுவிட்டு, 1000 பேர் வரை அமர்ந்து சாப்பிட எங்களிடம் வசதி இருக்கிறது என்று கூசாமல் சொல்கிறார்கள். [ஒரு விடுமுறை தினத்தில் இந்த உணவகத்துக்குப் போய் பாருங்கள். சந்தைக்கடைக்கு மாறி வந்துவிட்டோமா என்று தோன்றும்.]

இப்படியும் இன்னும் பல வழிகளிலும் நமக்கு எந்த அடிப்படை வசதியையும் தராமல் நம்மிடம் பணம் பிடுங்குவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்.

இவர்களை என்ன செய்யலாம்??
பேசாம Cableசங்கர் பரிந்துரைக்கும் சாப்பாட்டுக்கடைக்கே செல்லலாம் என்பது என் எண்ணம். நீங்க என்ன சொல்றீங்க?


2 comments:

  1. வணக்கம்!என்ன பண்ணுவது!உணவகங்களில் அந்த நேரத்தில் உட்கார இடமும்,சாப்பிட உணவும்,கிடைத்தால் போதும் என்று சாப்பிட்டுவிட்டு ஓட வேண்டி உள்ளது.

    ReplyDelete
  2. குலோத்துங்கன் கருத்து தான் என்னுடையதும்....

    ReplyDelete

நல்லவங்க...

ShareThis