September 04, 2011

மங்காத்தா - ஒரு பார்வை


 

அஜித்தின் 50-வது படம், வெங்கட் பிரபுவின் இயக்கம் என படம் தொடங்கிய நாளிலிருந்தே படத்துக்கான எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது. அதுவும் இதுவரை இல்லாத வரையில் படம் தொடங்கியதற்கே ஒரு டிரைலர் வெளியிட்டார்கள். அதுவும் வெங்கட் பிரபு twitter, facebook என கிடைத்த இடத்திலெல்லாம் முடிந்த அளவு எதிர்பார்ப்பை ஏற்றிக்கொண்டிருந்தார்.  எல்லாம் முடிந்த வேளையில் படம் வெளியிடுவதிலும் கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டது. மீண்டும் 'கண்கள் பனிக்க,,, இதயம் இனிக்க...' குடும்பமே சேர்ந்து படத்தை வெளியிட்டார்கள்.




அட ஆமாங்க...!! Red giant movies-க்கு நன்றி கார்ட், அப்புறம் A Dhayanithi Azhagiri Production அப்படின்னு பெரிய எழுத்தில் வருது, Cloud Nine Moviesக்கு ஒரு பெரிய அனிமேஷன், அப்புறம் வழக்கம் போல Sun Pictures பேர் வருது...[என்னங்க படிக்கும்போதே மூச்சு வாங்குதா...??  ஆனா இதெல்லாம் பாத்த பின்னாடிதான் படமே ஆரம்பிக்குது...]

சரி... படத்தை பத்தி பாக்கலாமா?

எப்பவுமே 10 பேர் கூடினா அந்த இடம் தன்னால கலகலப்பா மாறிடும் இல்லையா? அதுவும் வெங்கட் பிரபு மாதிரியான விளையாட்டுப் பையன் படம்னா கேக்கவா வேணும்....

 அஜீத், அர்ஜூன், த்ரிஷா, ஆன்ட்ரியா, அஞ்சலி, பிரேம்ஜி அமரன், வைபவ், புதுசா ரெண்டு பசங்க, ஜெயப்ரகாஷ்[சொக்கலிங்கம் வாத்தியாரேதான்....] அப்புறம்... இன்னும் நிறைய பேர் இருக்காங்க...

இவ்ளோ பேர் இருக்கும்போது ஜாலிக்கு என்னங்க குறைச்சல்? வெங்கட் பிரபு தனது விளையாட்டுத் தனத்தோட கொஞ்சம் கதை அப்படின்னு ஒரு சங்கதியை சேர்த்து.. ஒரு மாதிரியா படத்தை கொடுத்திருக்கார்....

அப்போ படம் எப்படி இருக்கு?

அதை கடைசியில் பாக்கலாம்....
படத்தில் சுவையான சங்கதிகள் சில....
1. வாலி படத்துக்கு அப்புறம் அஜீத் முகத்துல இப்போதான் ஒரு lively energy தெரியுது. இது அப்படியே தொடர்ந்தால் பல சறுக்கல்களை தவிர்க்கலாம்,




 2. அஜித்தின் நரை முடி தோற்றம், 40 வயது என சொல்லிக்கொள்வது [இது தமிழ் சினிமாவுக்கே புதுசு... ரஜினி, கமலுக்கே இன்னும் 35 தாண்டலையே!! ]. சாதாரணமா இருக்கவேண்டிய விஷயம் இது. தமிழ் சினிமாவின் 'என்றும் இளமை' கலாச்சாரத்தால் இதை குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஆகிறது,

3. அர்ஜூன் - அவருடைய நிரந்தர கதாபாத்திரமாகவே வருகிறார். ஆமாங்க... இதிலும் A Sincere Police Officer - But Corrupted.





4. 'வாடா பின்லேடா!!' பாடல் படமாக்கப்பட்ட விதம் மிக அருமை. கொஞ்சமும் பிசிறில்லாத கண்ணுக்கு இதமான கிராபிக்ஸ். இந்த பாடலுக்காக கிராபிக்ஸ் குழுவினருக்கு ஒரு தனி மலர்க்கொத்து. வாழ்த்துகள். 

5. அதேபோல் உலக நாடுகளின் ரூபாய் நோட்டுக்களை title காட்சிகளில் பயன்படுத்திய விதம் மிக அருமை. அதுவும் நமது ரூபாய் நோட்டில் இருக்கும் காந்தியின் உப்பு சத்யாகிரக நடை பயணம் 3D கோணத்தில் வருவது மிக அருமை.

6. பாடல்கள் அனைத்தும் கேக்கும்போது நல்லாதான் இருந்தது. ஆனா படத்துல பாக்கும்போது இத்தனை பாடல் இந்த படத்துக்கு தேவையா என்ற கேள்வியே தோன்றுகிறது.


 
7. 'அம்பானி பரம்பரை' பாடல் நாம் ஏற்கனவே கேட்ட கிராமத்து குத்துதான். ஆனால் அந்த வேகமான துள்ளல் இசையும், இடையில் வரும் 'ராமன் ஆண்டாலும்...' பாடலும் நல்ல கோர்வை. அதுவும் 'ராமன் ஆண்டாலும்...' பாடலை மட்டும் அஜீத் பாடுவதாக அமைத்தது நல்ல உத்தி. அதற்கு திரை அரங்கிலும் செம வரவேற்பு!!!

8.  அர்ஜூன் கோட் சூட் போட்டுக்கிட்டு நாலு பேர் பின்னாடி வர... நடக்கிறாரு, போறாரு, வாறாரு... ஆனா அஜீத் அவரை Action King என அழைத்தவுடன்தான் படத்தில் அவரது இருப்பு தெரிகிறது.

9. த்ரிஷா - முழுக்க அஜீத் படம். அதனால இவருக்கு அவ்வளவா வேலை இல்லை.

10. அஞ்சலி - வைபவ் character-க்கு sentiment scene வைக்க ஒருத்தர் வேணுமே!! அதுக்காக இருப்பவர்தான் அஞ்சலி. அந்த sentimentக்கு கொஞ்சம் அழுத்தம் வேணுமே!! அதுக்காக ஒரு பாட்டு...

11. அடடா... அர்ஜூன் characterக்கு ஒரு ஜோடி இல்லைன்னா நல்லா இருக்காதே!! அதுக்காக மொக்கையா ஒரு நடிகையா போட முடியும்? அதுக்காக வர்றவர்தான் ஆன்ட்ரியா. ஒரு காதல், ஒரு பயம்-அப்புறம் ஆறுதல், ஒரு அழுகை. அப்பாடா!! இவங்களுக்கும் ஸீன் ரெடி...

12. இந்த மாதிரி கொள்ளை கதைல ஒரு வில்லி வேணுமே!! இருக்கவே இருக்கா... நம்ம பஞ்சாயத்து... லக்ஷ்மி ராய். கொஞ்சம் கொஞ்சல், கொஞ்சம் வழிசல், அரை குறை ஆடையில் ஒரு பாட்டு.. வில்லி இல்லையா?? துப்பாக்கி எடுத்து நாலு பேரை சுடு. செத்துப் போ!!! 

படத்துல இருக்குற ஆண் கூட்டதுக்கு சமமா பெண்களும் இருக்காங்க.... ஆனா எண்ணிக்கைல மட்டும்...

  
சரி... அப்போ படம் ரொம்ப நல்லா இருக்கா?

படத்துல, "நீங்க நல்லவரா? கெட்டவரா?" ன்னு கேட்டவுடன் அஜீத் ஒரு reaction கொடுப்பாரே!!! இந்த கேள்விக்கு பதிலும் அதேதான்....




1. படத்தின் முக்கிய கட்டமே அஜீத் வில்லன் முகம் எடுக்கும் தருணம்தான்... "Money...Money...Money..." என்று அவர் உறுமும் இடத்தில் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி வரவேண்டுமே!!! ம்ஹூம்.... ஒண்ணையும் காணோம்.... இதுக்கு முக்கிய காரணம் அஜீத் இந்த படத்தில் ரொம்ப கெட்டவன்னு படம் தயாரிப்பில் இருக்கும்போதே சொல்லிட்டாங்க.... அப்புறம் எப்படிங்க அந்த காட்சில அதிர்ச்சி வரும்? மிக அருமையாக வரவேண்டிய காட்சி.... பத்தோடு பதினொன்றாகப் போய்விட்டது.

2. படத்துல Scenes எல்லாம் தனித்தனியாக யோசிச்சு எடுத்திருப்பாங்க போல.... தனியா நல்லா இருக்கு... ஆனா கோர்வையா பாக்கும்போது ஏதோ ஒண்ணு குறைவா இருக்குற மாதிரி தோணுது....

3. அந்த 500 கோடி டாலர் இருக்குற container-ஐ லவட்டுர காட்சி படு மொக்கையா இருக்கு. அந்த வெட்ட வெளியில சுத்தி போலீஸ் இருக்காங்க, ஒரு கிரேன்-ல container-ஐ தூக்கும்போது யாருமே பாக்க மாட்டாங்களாம்...  பாஸு..... லாஜிக் தேவையில்லாத கதைதான்...  அதுக்காக இப்படியா?

4. அப்புறம் உங்க படத்துல... சஸ்பெண்ட் ஆனா போலீஸ் உடனே கடத்தல், கொள்ளைனு இறங்கிடுறாங்களே!! ஏன் பாஸு? 

 5. இந்தியன் படத்துலர்ந்து, இங்க இந்தியால செத்துட்டு சரியா மலேஷியா, சிங்கப்பூர்ல உயிரோட வர்றாங்களே... எப்படி?

இப்படி பல விஷயங்கள் இருந்தாலும் ஒரு விஷயம் உறுதியாகிடுச்சி.... நல்ல நடிகன்னு பேர் எடுக்கணுமா? பாலா படத்துல நடி.... ஜாலியான, கொண்டாட்டமான படம் வேணுமா? வெங்கட் பிரபுக்கிட்ட போ!!

இனிமே இந்த மாதிரி எல்லோரும் சொல்லுவாங்க.....

மங்காத்தா - அஜீத்-ன் lively style and look, அப்புறம் படத்தின்கூடவே கலந்து வரும் மெல்லிய நகைச்சுவை.... இதுக்காக கண்டிப்பா பாக்கலாம்....

பின்குறிப்பு: மங்காத்தா படமாக்கிய காட்சிகளை கடைசியில் காட்டினார்கள். மிகவும் நன்றாக இருந்தது. அதில் இருந்த ஜாலி இன்னும் படத்தில் சேர்த்திருந்தால் படம் இன்னும் அருமையாக வந்திருக்கும்.

No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis