October 30, 2011

வேலாயுதம்

விஜய்க்கு ரீமேக் ஆசை விடாது போல. இதுவரை தெலுங்கு படங்களின் ரீமேக்கில் நடித்துக்கொண்டிருந்தவர் இப்போ தமிழ் படங்களையே ரீமேக் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

திருபாச்சி தங்கச்சி சென்டிமெண்ட் + ரமணா climax + அந்நியன் climax + விஜயகாந்த், அர்ஜூன் பட தீவிரவாதிகள் = வேலாயுதம்.

 
 இந்தியாவில் குண்டு வெடிக்காத ஒரே நகரம் சென்னைதான். அதனால் அங்கு சீக்கிரம் குண்டுவெடிப்பு நடத்தி அமைதியை சீர்குலைக்கனும் என்பது தீவிரவாத கும்பல் திட்டம். [ஏண்டா!! அவங்களுக்கு அந்த எண்ணம் இல்லாட்டியும் நீங்களே சொல்லிக் கொடுப்பீங்க போலிருக்கே?] இதற்கு உதவி செய்பவர் தமிழ்நாட்டு உள்துறை அமைச்சர்.[எங்கப்பா புடிச்சீங்க அந்த ஆளை? Serious காட்சிகள்ல அந்த ஆள் பேசுற வசனம் எல்லாம் செம காமெடி.]

திட்டப்படி முதல்ல ஒரு குண்டு வெடிக்குது. ஆனா குண்டு வெச்சவங்க ஒரு விபத்தில் இறந்து போக, இவர்களைக் கொன்றது வேலாயுதம்தான் என தொலைக்காட்சி நிருபர் ஜெனிலியா கற்பனையாக எழுதி வைத்து விட, தங்களைக் காக்க வந்த வீராதி வீரன், சூராதி சூரன் எனக் கொண்டாடுகின்றார்கள். 
 
இது எதுவும் தெரியாத விஜய், தன் தங்கை திருமண விஷயமாக குடும்பத்தோடு சென்னை வருகிறார். அவர் போகிற இடங்களில்,  எதேத்சையாக செய்யும் காரியங்களால் மக்கள் குண்டு வெடிப்பில் இருந்து தப்பிக்கிறார்கள். இதனால் வேலாயுதம்தான் தங்களைக் காப்பாற்றுவதாக மக்கள் நம்ப ஆரம்பிக்கிறார்கள்.

ஜெனிலியா மூலம் உண்மை அனைத்தையும் அறிந்த விஜய் எடுக்கும் அதிரடி(?) முடிவுதான் ‘வேலாயுதம்’.

தொடர்ந்து fail mark எடுக்கும் மாணவன், border-ல just pass ஆனா எவ்ளோ சந்தோஷப்படுவான். அந்த நிலைதான் விஜய்க்கும்.
 
6 படங்கள் மரண மொக்கைகள். அதன் பின் இயக்குனர் தயவால் சுமாராய் வந்த காவலன் சூப்பர் படம் ஆனது. அந்த வரிசையில்தான் வேலாயுதமும்.

என்னதான் ஏற்கனவே பார்த்த காட்சிகள், மொக்கை heroin [ஜெனிலியா இல்லீங்கோ!!], அர்த்தமற்ற சண்டைக்காட்சிகள், அரைவேக்காட்டு தத்துவப் பாடல், குத்துவசனங்கள் என்று இருந்தாலும் இவை அனைத்தையும் மீறி படம் பார்க்க வைத்தது விஜயின் screen presenceம், சந்தானம் நகைச்சுவையும்தான். முதல் பாதி முழுக்க பின்னி எடுக்கிறார். அதுவும் வைரம் திருடும் காட்சியில் அரங்கம் முழுக்க சிரிப்பாலை. சந்தானம் திரையில் தெரிந்தாலே சிரிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

அப்புறம் அந்த Heroin. எங்க புடிச்சாங்கன்னே தெரியல. Expression–ம் வரல, நடிப்புன்னா என்னன்னும் தெரியல. இதெல்லாம் பாக்கணும்னு நம்ம தலையெழுத்து.

ஜெனிலியா தொலைக்காட்சி நிருபராய் வந்து கவனம் ஈர்க்கிறார்.

 
கில்லியில் பார்த்த விஜய் அதே துள்ளல், சுறுசுறுப்போடு வருகிறார். கிராமத்தில் தங்கைக்காக இவர் செய்யும் சேட்டைகள் ஏற்கனவே பார்த்ததுதான் என்றாலும் நன்றாக உள்ளது. ‘பாசமலர்’ காட்சியில் கிராமத்தினர் கடுப்பாவது ஓர் உதாரணம். ஆனால் கல்கி அவதாரம் போல தப்பு நடக்கும் இடம் அனைத்திலும் சரியாக வந்து தன் மேல் ஒரு அடிகூட படாமல் அனைவரையும் துவம்சம் செய்கிறார். [சுறா, வேட்டைக்காரன் நினைப்புல இருந்து வெளிய வாங்க சார். இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருக்கப் போறீங்க?] அதுவும் climax சண்டையில், “What a man?” என்று அரங்கின் பல இடங்களில் கேட்டது [படையப்பா effect!!].

 
ஆனா எவ்ளோ மொக்கைகள் வந்தாலும் விஜய் படம்னா ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ரஜினிக்குப் பிறகு ஒரு mass entertainer-னா அது விஜய்தான். இதை சரியா புரிஞ்சும் ஏன் தப்பான வழியில போய்க்கிட்டிருக்கர்னுதான் தெரியல.

இசை – விஜய் ஆண்டனி. எப்பவும்போல பாடல்களை குத்தி எடுக்காமல் கொஞ்சம் மிதமான இசையை கொடுத்துள்ளார். ‘மொளைச்சு மூணு இலை’ பாடல் இதமான மெல்லிசை.

இயக்கம் – ஜெயம் ராஜா. தனது தம்பியை விட்டு, தனியாக செய்திருக்கும் படம். வழக்கமான மொழிபெயர்ப்புப் படமாக இல்லாமல் முதன்முறையாக கதை, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். அந்த வகையில் முதல் பாதியில் வெற்றி பெற்றிருக்கிறார். நீளமான சண்டைக் காட்சிகள், climax வசனம் என பின்பாதியில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ஒரு அருமையான படம் கிடைத்திருக்கும். ஆனாலும் பழைய விஜய் படங்கள் போல் அல்லாமல் ரசிக்கும் வகையில் ஒரு விஜய் படம் கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்.

வேலாயுதம் – கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இல்லை, பார்த்தாலும் நஷ்டம் ஒன்றும் இல்லை.

No comments:

Post a Comment

நல்லவங்க...

ShareThis